விஜயகாந்த் நலம் பெற வேண்டி அன்னதானம்!

Wednesday 01, August 2018, 11:17:48

உடல் நலிவுற்றிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி அவரது கட்சியினர் கோவில்களில் வேண்டுதல், உருளுதண்டம், மொட்டையடித்தல், மண்சோறு சாப்பிடுதல் போன்ற நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று ஜூலை 30ந் தேதி காலை 9.00 மணியளவில் வாழப்பாடி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பாக அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாழப்பாடி ஒன்றிய கழக செயலாளர் நடிகர் செல்வம், பேரூர் செயலாளர்கள் கேபிள்முத்து, சண்முகம் மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz